விஜய்யின் அப்பா எஸ்ஏசி ஆபிஸ் ஜப்தி! கோர்ட் உத்ராவால் அதிர்ச்சி
நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏசி தற்போதும் அவ்வப்போது சில திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். அவரது அலுவலகத்தை ஜப்தி செய்ய சொல்லி தற்போது நீதிமன்றம் ஒரு வழக்கில் உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எஸ்ஏசி
விஜய் மற்றும் எஸ்ஏசி இடையே கடந்த சில வருடங்களாக பிரச்சனை இருந்து வருவது அனைவருக்கும் தெரியும் . எஸ்ஏசி அவரது பிறந்தநாளை விஜய் இல்லாமல் தனிமையில் கொண்டாடிய புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.
அதனால் விஜய்யை அதிகம் பேர் விமர்சித்தனர். பெற்றோரை தனிமையில் தவிக்கவிட்டுவிட்டார் என விமர்சனங்கள் எழுந்தது.

ஆபிஸ் ஜப்தி
இந்நிலையில் எஸ்ஏசி அலுவலகத்தை ஜப்தி செய்ய சொல்லி சென்னை எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
எஸ்ஏசி இயக்கிய சட்டப்படி குற்றம் என்ற படத்தின் விளம்பரத்திக்காக தர வேண்டிய 76 ஆயிரம் ருபாய் தொகையை தராததால் விளம்பர நிறுவன உரிமையாளர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த வழக்கில் தான இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நான்கு நாட்கள் முடிவில் தி லெஜண்ட் படத்தின் மொத்த வசூல்.. இத்தனை கோடியா