நடிகர் விஜய் தற்போது சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு முழு நேர அரசியலில் களமிறங்கி இருக்கிறார். அவரது கடைசி படம் 2026 பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆக ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் விஜய் கெரியரில் முக்கிய படமான ப்ரண்ட்ஸ் படம் தற்போது ரீரிலீஸ் ஆக இருக்கிறது. நவம்பர் 21ம் தேதி இந்த படம் மீண்டும் திரைக்கு வருகிறது.

சிவாஜிக்கு அடுத்து விஜய் தான்..
இந்நிலையில் இன்று ப்ரண்ட்ஸ் படத்தின் விழா நடைபெற்றது. அதில் நடிகர் ரமேஷ் கண்ணா கலந்துகொண்டு பேசும்போது விஜய்க்கு இருக்கும் திறமை பற்றி கூறினார். எம்ஜிஆருக்கு பிறகு விஜய்க்கு தான் இந்த திறமை இருக்கிறது என அவர் கூறி இருக்கிறார்.
"எல்லாரும் டைலாக் என்ன என கேட்டு, இயக்குனரிடம் எப்படி செய்ய வேண்டும் என கேட்டுவிட்டு அதன் பின் தயாராகி வந்து நடிப்பேன். ஆனால் விஜய் எப்போதும் அமைதியாக தான் இருப்பார், வந்து அற்புதமாக நடித்துவிட்டு போய்விடுவார்."
"டப்பிங் கூட நான் நான்கு முறை பேசுவேன். அவருக்கு ஒரே டேக் தான். டப்பிங்கில் சிறந்த கலைஞர் அவர். எனக்கு தெரிந்து சிவாஜி கணேசன் மட்டும் தான் அப்படி பேசி இருக்கிறார்" என ரமேஷ் கண்ணா கூறி இருக்கிறார்.

ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan