விஜய் கஷ்டத்தில் இருக்கும் போதெல்லாம் இதைதான் பார்ப்பாராம்- அவரே கூறிய விஷயம்
தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகர் விஜய். இவரது மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது. எந்த இடத்தில் எடுத்தாலும் படத்திற்கு நல்ல வசூல் என்கின்றனர்.
நாளை முதல் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நேரத்தில் தான் விஜய்யின் ஒரு பேட்டி ரசிகர்களிடம் பேசப்பட்டு வருகிறது.
ஒரு பேட்டியில் விஜய்யின் கஷ்டமாக நினைக்கும் நேரத்தில் என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், நான் கவுண்டமணி, செந்தில் அவர்களின் ரசிகன். இப்பவும் என்னுடைய காரில் அவர்களுடைய நகைச்சுவை காட்சி சிடி வைத்திருக்கிறேன். மனது கஷ்டமாக இருந்தாலும், நான் டவுனாக இருக்கும் கஷ்டமாக அவர்கள் வீடியோ பார்ப்பேன். அப்போது நம்மை அறியாமலேயே ஒரு சிரிப்பு வரும் என கூறியுள்ளார்.