விஜய்யின் லியோ படத்திற்கு அதிகாலை காட்சிகள் போடக்கூடாது, காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போட்ட உத்தரவு ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. விஜய்க்கு மட்டும் ஏன் இந்த நெருக்கடி என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் லியோ பட தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருக்கிறார். அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் மற்றும் முதல் காட்சி 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே தொடங்க அனுமதிக்க வேண்டும் என கோரி இருக்கிறார்.
தீர்ப்பு எப்போது?
இன்று அவசர வழக்காக இதை இன்று மதியம் 1 மணிக்கு நீதிமன்றம் விசாரிக்க இருந்தது. ஆனால் தற்போது நாளை காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.
அதனால் லியோ 4 am காட்சி இருக்குமா இல்லையா என்பது நாளை தான் தெரியவரும்.