கர்ணன் இயக்குனர் மாரி செல்வராஜிடம் கதை கேட்டாரா தளபதி விஜய்? அவரே அளித்த பதில்
இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக மாறியுள்ளார், இவர் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்கள் மிக சிறந்த விமர்சனங்களை வெற்றியடைந்துள்ளது.
மேலும் இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள கர்ணன் திரைப்படம் பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
அதுமட்டுமின்றி கர்ணன் திரைப்படம் சமூக ரீதியாகவும் பலரிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இப்படத்தில் காட்டப்பட்டுள்ள பழைய சம்பவங்கள் குறித்து ரசிகர்கள் பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மாரி செல்வராஜ் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் கர்ணன் படம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார், அப்போது அவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்தும் தளபதி விஜய் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ் விஜய் சார் தன்னை தொலைபேசியில் அழைத்ததாகவும், பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படத்தின் பாடல்கள் குறித்து பாராட்டியதாகவும் கூறியுள்ளார்.