தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விஜய் - சங்கீதா
நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் - சங்கீதாவின் விவாகரத்து வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அன்று முதல் முறையாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பின், ஏப்ரல் 20ஆம் தேதிக்கு, அதாவது தேர்தலுக்கு சரியாக 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டது.
அதிரடி உத்தரவு
இன்று, விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், முதற்கட்ட விசாரணைக்காக நடிகர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், தேர்தல் பணிகள், பாதுகாப்பு காரணங்களாலும் விஜய்யும் சங்கீதாவும் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கை நீதிபதி விசாரித்த நிலையில், வருகிற ஜூன் 15ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu