பொன்னியின் செல்வனில் விஜய் நடித்திருக்க வேண்டிய ரோல்! என்ன தெரியுமா?
பொன்னியின் செல்வனில் முதலில் விஜய் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருந்தார். அது என்ன ரோல் தெரியுமா.
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் கதையை படமாக்க வேண்டும் என்பது எம்ஜிஆர் காலம் தொடங்கி பலரும் முயற்சித்த ஒன்று. கமல்ஹாசன் கூட அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். ஆனால் தற்போது மணிரத்னம் மூலமாக தான் இது நிறைவேறி இருக்கிறது.
லைகா தயாரிப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் அந்த படம் உருவாகி இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு வெளியான PS1 ட்ரைலருக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கிறது.
விஜய் நடித்திருக்க வேண்டிய ரோல்
இந்நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் தற்போது அளித்து இருக்கும் பேட்டியில் முன்பு நடிகர் விஜய், மகேஷ் பாபு உள்ளிட்டவர்கள் பொன்னியின் செல்வனில் நடிக்க இருந்ததாக தெரிவித்து இருக்கிறார்.
விஜய் வந்தியத்தேவன் ரோலிலும், மகேஷ் பாபு அருண்மொழிவர்மன் ரோலிலும் நடிக்க இருந்ததாக அவர் கூறி இருக்கிறார்.
விஜய் நடிக்க இருந்த ரோலில் தற்போது கார்த்தி நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர் என் மகள் இல்லை, வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டாளே : ராஜ்கிரண் கோபமான அறிக்கை