பிரபல நடிகரிடம் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி.. ஓ இது தான் விஷயமா!
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரில் ஒருவராக திகழ்பவர் விஜய் சேதுபதி. அன்மைக்காலமாக அவர் வில்லனாகவும் அதிகம் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் ஹிந்தி படமான ஜவான் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.

மன்னிப்பு கேட்டேன்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதி, ஷாருக்கானுடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை பற்றி கூறியுள்ளார். அதில் அவர்," நடிகர் ஷாருக்கான் ஒரு இனிமையான மனிதர். படத்தின் முதல் நாள் ஷூட்டிங் அவருடன் சேர்ந்து நடிப்பதை நினைத்து பயந்தேன். ஆனால் என்னை அவர் இயல்பாக நடத்தினார்.”
பல விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினேன். அவர் ஒரு ஜென்டில்மேன் என்றும் பாலிவுட் சினிமாவின் மிக பெரிய நட்சத்திரமாக அவர் காட்டிக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
”சில சமயங்களில் நான் ஷாருக்கனிடம் அதிகமாக பேசி அவரை தொந்தரவு செய்கிறேன் என்று எண்ணி அவரிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாமல். வேறு ஏதேனும் கேள்வி இருந்தால் கேளுங்கள் என்று என்னிடம் கூறுவார்" என்று விஜய் சேதுபதி கூறியிருந்தார்.

அபர்ணாவிடம் எல்லைமீறி நடந்து கொண்ட கல்லூரி மாணவன்.அதன் பின் என்னாச்சு தெரியுமா?