பிக்பாஸ் 10 மேடையில் பேசியது சர்ச்சையானது குறித்து விஜய் சேதுபதி ஓபன் டாக்...
பிக்பாஸ் 10
பிரம்மாண்டத்தின் உச்சமாக விஜய் டிவியில் பிக்பாஸ் 10வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த செப்டம்பர் 6ம் தேதி 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இதில் மக்களுக்கு அதிகம் தெரிந்த, தெரியாத போட்டியாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இதுவரை 2 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர், பிரபல நடிகை ஆனந்தி வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளார்.

கடைசி வார இறுதி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி வந்துபோது அவர் சட்டசபை விஷயங்கள் பல பேச அது சர்ச்சையானது. இதனால் விஜய் சேதுபதிக்கு நிறைய எதிர்ப்புகளும் வந்தது, ஆதரவும் வந்தன.
விளக்கம்
இந்த நிலையில் விஜய் சேதுபதி, பிக்பாஸ் மேடையில் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர், இந்த மேடையில் பேசப்படும் கருத்துகள் அனைத்தும் இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கும் எங்களுக்கும் மட்டுமே சொந்தமானவை. வெளியில் இருக்கும் எந்த நபரையும் அல்லது அமைப்பையும் சார்த்து குறிப்பிடப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இதைப்பற்றி ஏற்கெனவே புரிந்திருக்கும் என்று நினைத்தேன், ஆனால் கடந்த வாரமே இதை சொல்லியிருக்க வேண்டும், இப்போது சொல்ல வேண்டிய அவசியமாகிவிட்டது என விளக்கமளித்துள்ளார்.