விக்ரமில் சந்தனம் சாகவில்லை, அப்போது தளபதி 67ல் வருவாரா?- விஜய் சேதுபதி சொன்ன பதில்
விஜய் சேதுபதி
நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, வில்லன், ஹீரோ என்ற அணைத்து கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022, ஜூன்- 3 வெளியான விக்ரம் படத்தில் உலகநாயகன் கமல், பகத் பாசில், நரேன் போன்ற முன்னனி நடிகர்களோடு போட்டி போட்டு நடித்து முத்திரை படைத்தார் விஜய் சேதுபதி..
இவர் விக்ரம் படத்தில் டாக்ஸிக் வில்லனாக சந்தனம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் சந்தனம் அடிபட்டு இருப்பார், இறப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை, இதனால் விஜய் சேதுபதி மீண்டும் தளபதி 67, LCU (லோகேஷ் சினிமெட்டிக் யூனிவெர்ஸ்) படங்களில் நடிப்பார் என்று விஜய் சேதுபதி ரசிகர்கள், நெட்டிசன்கள் ட்வீட் செய்து வந்தனர்.
நடிகரின் பதில்
இந்நிலையில் பேட்டி அளித்த விஜய் சேதுபதி, "சந்தனம் கதாபாத்திரத்தின் எஸ்சிட்மெண்ட் முடிந்து விட்டது, இனி அது வந்தாலும் மக்களுக்கு பிடிக்காது. தளபதி 67 படத்தில் நான் நடிப்பது பற்றி எந்த தகவலும் லோகேஷ் கனகராஜ் என்னிடம் கூறவில்லை.
சந்தனம் கதாபாத்திரம் மீண்டும் வருவதை நானும் விரும்பவில்லை". அது இனி அவ்ளோதான் என்று எண்டு கார்டு போட்டார் விஜய சேதுபதி.