இனி வில்லன் ரோலில் நடிக்கப்போவதில்லை!! விஜய் சேதுபதி எடுத்து அதிரடி முடிவு
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வந்து விஜய் சேதுபதி. இவர் பெரும்பாலும் வித்தியாசமான கதாபாத்திரம், கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் விக்ரம் வேதா, மாஸ்டர், விக்ரம் மற்றும் சமீபத்தில் வெளிவந்த ஜவான் போன்ற திரைப்படங்களில் வில்லன் ரோலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருந்தார்.
அதிரடி முடிவு
சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய விஜய் சேதுபதி, நான் இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதில்லை. வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சில சிக்கல்கள் இருக்கிறது.
சில ஹீரோக்கள் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதாலேயே திரைப்படங்களில் வில்லனாக நடித்தேன். வில்லனாக நடிக்க நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தில் இருக்கும் ஹீரோவின் இமேஜை குறைக்காமல் நடிக்க அறிவுறுத்தப்படுவதாகவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.