மும்பையில் ரசிகர்களிடையே சிக்கிக்கொண்டு தவித்த விஜய் சேதுபதி!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர்.
வரிசையாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஏகப்பட்ட திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ள விஜய் சேதுபதி செம பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் லாபம் திரைப்படம் திரையரங்கிலும், துக்ளக் தர்பார் திரைப்படம் சன் டிவியிலும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் விஜய் சேதுபதி மும்பையில் ஷூட்டிங்கிற்காக சென்ற போது அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அவரை சூழுந்து கொண்டனர்.
மேலும் ரசிகர்கள் அவரிடம் போட்டோ வேண்டும் என்றும் கொரோனா பரவிவிடும் என பயப்பட வேண்டாம் என்றும் விஜய் சேதுபதியை நச்சரித்துள்ளனர்.