வறுத்தெடுத்த விஜய் சேதுபதி.. கதறிய பார்வதி! பிக் பாஸ் இன்றைய ப்ரோமோ
பிக் பாஸ் 9ம் சீசன் தொடங்கி ஒரு வாரம் தான் முடிந்து இருக்கிறது. அதற்குள் ஒரு போட்டியாளர் மன அழுத்தம் தாங்க முடியாமல் வெளியில் சென்றுவிட்டார். மற்றொரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதால் மொத்த போட்டியாளர்கள் எண்ணிக்கை 18 ஆக குறைந்திருக்கிறது. நந்தினி மற்றும் பிரவீன் காந்தி ஆகியோர் தான் எலிமினேட் ஆன போட்டியாளர்கள்.
இந்நிலையில் சனிக்கிழமை எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
வறுத்தெடுத்த விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி பேசும்போது ஆதிரை திமிராக 'ஓகே' என சொன்னதால் அவர் கடும் கோபமாகிவிட்டார். அவரை விஜய் சேதுபதி கோபமாக பேசி இருக்கும் ப்ரோமோ வைரல் ஆகி இருக்கிறது.
அடுத்து கம்ருதீன் பேசும்போது பிக் பாஸ் வீடு மற்றும் luxury வீடு ஆகிய இரண்டுக்கும் பிரச்சனை இருப்பது போல பேசினார். உங்களுக்கு ஆதரவாக பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் வர வேண்டும் என கம்ருதீன் பாலிடிக்ஸ் செய்வதாக விஜய் சேதுபதி விளாசினார்.
கதறிய பார்வதி
இந்த வாரம் முழுக்க பார்வதி மற்ற போட்டியாளர்கள் பலரையும் வம்பிழுத்து வைத்திருந்தார். அந்த பஞ்சாயத்து தற்போது விஜய் சேதுபதி வரை சென்று இருக்கிறது.
'நீங்கள் செய்வது வெளியில் எப்படி project ஆகிறது என சொல்லப்படுகிறது. அதை கூலாக எடுத்துக்கொள்வது நாகரிகம் அல்ல, நல்லது அல்ல' என விஜய் சேதுபதி விளாசுகிறார்.
அதை கேட்டு பார்வதி கதறி கதறி அழுது இருக்கிறார்.