' பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது '- விஜய் டிவி சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாவம் கணேசன். இந்த சீரியலில் KPY பிரபலம் நவீன் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் ஹீரோவின் அக்காவாக, சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை விலாசினி.
இந்நிலையில் நடிகை விலாசினி சமீபத்தில் தனது கணவர் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறியுள்ளார்.
அதில் " திருமண வாழ்வை பொறுத்தவரை தான் ஏமாந்துவிட்டதாகவும், தனது கணவர் சபரி ஞானபிரகாஷ் தன்னையும், தனது குடும்பத்தினரையும் தொல்லை செய்வதாகவும் தெரிவித்துள்ளார் ".
" மேலும் அவர் பல பேருடன் மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார் என்றும், பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்றும் விலாசினி கூறியுள்ளார் ".
" திருமணத்துக்கு முன்பு அவர் இவ்வளவு மோசமானவர் என்று தனக்கு தெரியாது என்றும், திருமணத்திற்கு பின்னர் தான் உண்மைகளை ஒவ்வொன்றாக கண்டுபிடித்தேன் என்று பேசியுள்ளார் ".
" இதனால் எனது கணவரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்து விட்டேன் என்றும் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை விட்டு விலகுவது என்னுடைய வாழ்க்கைக்கு நல்லது என்று முடிவு செய்திருக்கிறேன் " என விலாசினி தெரிவித்துள்ளார் .