என்னை மிகவும் கொடுமைப்படுத்துகிறார்கள்- வீடியோ வெளியிட்டு புலம்பும் தொகுப்பாளினி ஜாக்குலின்
தொகுப்பாளினி, நாயகி
விஜய் தொலைக்காட்சி மூலம் தனது இரண்டு திறமைகளை காட்டி மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் ஜாக்குலின். முதலில் தொகுப்பாளினியாக உள்ளே நுழைந்தவர் தொடர்ந்து ரக்ஷனுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
எல்லா நிகழ்ச்சியிலும் இவரது குரல் தான் முதலில் ஹைலைட்டாகவும் கொஞ்சம் கலாய்த்தும் பேசப்பட்டது.
அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேன்மொழி பிஏபிஎல் என்ற தொடரில் நாயகியாக நடித்து வந்தார் ஜாக்குலின், இப்போது அதுவும் முடிந்துவிட்டது.
புலம்பும் வீடியோ
இப்போது ஜாக்குலின் தொகுப்பாளினியாகவும் இல்லை நாயகியாகவும் எதிலும் நடிக்கவில்லை. தற்போது அவர் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் மும்முரமாக உள்ளார்.
வாந்தி, மயக்கம் வந்தாலும் தன்னை உடற்பயிற்சி செய்யச் சொல்லி கொடுமைப்படுத்துவதாக அவரே ஜாலியாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்கள்,
3 நாள் முடிவில் கார்த்தியின் விருமன் திரைப்படம் செய்த வசூல்- சென்னையில் மட்டும் இவ்வளவா?