மகாநதி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... அழுது கண்ணீர்விட்ட நடிகர்கள், எமோஷ்னல் வீடியோ
மகாநதி சீரியல்
குளோபல் விவ்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் மகாநதி.
அப்பாவை இழந்த அக்கா-தங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த தொடர் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பின் காவேரி-விஜய் கதாபாத்திரம் மக்களிடம் பிரபலமாக அதிக வரவேற்பு பெற அவர்களை வைத்தே கதை நகர்ந்து வந்தது.

கிளைமேக்ஸ்
காவேரி-விஜய் இருவரும் அழகிய ஜோடியாக பேவரெட் ஜோடி என நிறைய விருதுகள் பெற்று வந்தனர். கடைசியாக கதையில் காவேரி எல்லா விஷயத்தையும் மறந்துவிட்டதாக கதை செல்கிறது.

இந்த நேரத்தில் தான் மகாநதி சீரியல் முடிவுக்கு வருவதாக செய்திகள் வெளியாக இப்போது கிளைமேக்ஸ் படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. கடைசிநாள் படப்பிடிப்பின் போது படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட போட்டோ, வீடியோ வெளியாக அதில் நடிகர்கள் அழுவது தெரிகிறது.
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri