விஜய்-வெற்றிமாறன் இணையும் படத்தின் கதை இதுதானா?- வெளிவந்த தகவல்
நடிகர் விஜய் மாஸ்டர் பட ரிலீஸை தொடர்ந்து தனது அடுத்த படத்தின் பணியை அப்போதே தொடங்கிவிட்டார்.
65வது படத்தில் புதிய இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கதையில் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது.
சென்னை, வெளிநாடு என மாற்றி மாற்றி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த நேரத்தில் தான் ஒரு புதிய செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அது என்னவென்றால் விஜய்-வெற்றிமாறன் இணையும் படத்தின் கதை பற்றி தான்.
வெற்றிமாறன் Shoes Of The Dead என்ற நாவலை தழுவி தான் படம் இயக்க இருக்கிறாராம். இந்த நாவல் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு ஏழை விவசாயியின், விதவை மனைவி நஷ்டஈடு கேட்டு போராடுகிறார்.
அரசியல் சக்திகள் தொடர்ந்து அவரது கோரிக்கையை நிராகரிக்கின்றன. இறந்து போன விவசாயியின் தம்பி எப்படி சட்டப் போராட்டத்தின் மூலம் நீதி பெற்று தருகிறார் என்பது தான் இந்த நாவலின் கதை. இந்த நாவலின் உரிமைய வாங்கிய வெற்றிமாறன், விஜய்யிடம் கதையை கூறி ஓகே வாங்கியதாகவும் கூறப்படுகிறது.