சோறு திங்க தான் வரீங்களா.. தயாரிப்பாளரின் செயலால் கோபத்தின் உச்சிக்கு சென்ற விஜயகாந்த்
விஜயகாந்த்
திரையுலகில் மூத்த நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த், உடல் நலம் சரியில்லாத காரணத்தால் நேற்று காலை உயிரிழந்தார்.
இவருடைய உடலுக்கு மக்களும், திரையுலக நட்சத்திரங்களும், அரசியல் பிரமுகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்தின் மறைவுக்கு பின் அவர் செய்த பல நல்ல விஷயங்கள் குறித்து தகவல் வெளியாகி வருகிறது.
அதில் இப்போது நாம் பார்க்க இருப்பது கஜேந்திரா படப்பிடிப்பின் போது இயக்குனருக்கும் துணை இயக்குனர்களுக்கும் நடந்த பிரச்சனையை கேப்டன் சரி செய்த விதம் குறித்து தான்.
சோறு திங்க தான் வரீங்களா
கஜேந்திரா படபிடிப்பின் போது படத்தின் தயாரிப்பிலார், படப்பிடிப்பு தாமதம் ஆனதால் இரண்டு துணை இயக்குனர்களை ஆவேசத்துடன் நீங்கள் சோரு திங்க தான் வரீங்களா என்று கூறியுள்ளார்.
இதனால் அவர்கள் இருவரும் மனம் உடைந்து போயுள்ளனர். இதனால் அவர்கள் இருவரும், மூன்று நாட்கள் படப்பிடிப்பு தளத்தில் மதிய உணவு சாப்பிடாமல் இருந்து வந்துள்ளனர்.
இதை ஒரு நாள் கேப்டன் விஜயகாந்த் கவனித்துள்ளார். அப்போது அவர்கள் இருவரையும் அழைத்து என்ன பிரச்சனை என்று கேட்ட பொழுது தயாரிப்பாளர் இப்படி பேசிவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து, கேப்டன் விஜயகாந்த் தயாரிப்பாளரை அழைத்து சாப்பாடு விஷயத்தில் இப்படியா பேசுவது என்று கூறிவிட்டு, இன்னிமேல் அவர்கள் இருவருடன் இணைந்து நானும் உங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தின் சாப்பாடை சாப்பிட மாட்டேன் என்று கூறிவிட்டார்.
அதற்கு பிறகு விஜயகாந்துக்கும் அந்த இரண்டு துணை இயக்குனர்களுக்கும் கேப்டன் வீட்டில் இருந்து தான் தொடர்ந்து 15 நாட்கள் உணவு வந்தது என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் இந்த சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.