குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய விஜயகாந்த்.. அழகிய குடும்ப புகைப்படம்..
ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த்.
அரசியலில் கவனம் செலுத்த துவங்கிய விஜயகாந்த், சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
ஆனால், அதன்பின் உடல்நிலை சரியில்லாமல் போனதன் காரணமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
நடிகர் விஜயாகாந்த், 1990ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விஜயகாந்த் தனது இரு மகன்கள் மற்றும் மனைவியுடன் இணைந்து இன்று பொங்கலை கொண்டாடியுள்ளார்.
தனது குடும்பத்துடன் நடிகர் விஜயகாந்த் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..