நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம்
துள்ளுவதோ இளமை பட புகழ் நடிகர் அபிநய் சில தினங்கள் முன்பு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு பணம் இன்றி தவிப்பதாக சில மாதங்கள் முன்பு அவர் கூறி இருந்தார். அதன் பிறகு அவருக்கு KPY பாலா உள்ளிட்ட சில நடிகர்கள் உதவி செய்தனர்.
இருப்பினும் சில தினங்கள் முன்பு அவர் தூக்கத்திலேயே மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குக்கு கூட உறவினர்கள் யாரும் வராத நிலையில் சினிமா துறையினரே அதை நடத்தினர்.

4 நாட்கள் ஒரே வீட்டில்..
பல வருடங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த ஒரு ad ஷூட்டிங்கிற்காக நடிகர் அபிநய் உடன் ஒரே சர்வீஸ் அபார்ட்மெண்டில் 4 நாட்கள் அவருடன் இருந்ததாக நடிகை விஜயலக்ஷ்மி தெரிவித்து இருக்கிறார்.
ஒரே வீட்டில் இருந்தாலும் அவர் ஜென்டில்மேன் ஆக நடந்துகொண்டார் என்றும், அவர் இரவில் தனியாக அமர்ந்து குடிப்பதை பார்த்து தான் அவரிடம் பேசியதாகவும், அப்போது அபிநய் தனது மனதில் இருந்த வலிகளை 2 மணி நேரம் கொட்டி தீர்த்தார் என நடிகை விஜயலக்ஷ்மி கூறி இருக்கிறார்.
தற்போது அவர் இறந்துவிட்டதாக செய்தி கேட்டு நான் கண்ணீர் விட்டேன், அவர் வலிகள் முடிந்துவிட்டது, தற்போது அமைதியை கண்டிருப்பார் என விஜயலக்ஷ்மி கூறி இருக்கிறார்.