சூப்பர்ஹிட் படத்தின் வாய்ப்பை தவறவிட்ட விக்ரம்.. அதை சரியாக பயன்படுத்திய சூர்யா
சூர்யா - விக்ரம்
சூர்யா - விக்ரம் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் பிதாமகன். பாலா இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த 2003ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.
இப்படத்தில் சூர்யா மற்றும் விக்ரமுடன் இணைந்து லைலா, சங்கீதா, கருணாஸ், மனோபாலா, மகாதேவன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மாபெரும் வெற்றியடைந்த இப்படம் இன்று வரை நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த சூப்பர்ஹிட் சூர்யா - விக்ரம் கூட்டணி பிதாமகன் படத்திற்கு முன்பே இணையவிருந்தது. ஆனால், அது நடக்காமல் போய்விட்டது.
வாய்ப்பை தவறவிட்ட விக்ரம்
அமீர் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்து 2002ல் வெளிவந்த திரைப்படம் மௌனம் பேசியதே. இப்படத்தில் சூர்யா கவுதம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் நடிகர் நந்தா கண்ணன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால், முதன் முதலில் சூர்யா நடித்த கவுதம் கதாபாத்திரத்தில் விக்ரம் தான் நடிக்கவிருந்தாராம். நந்தா நடித்திருந்த கண்ணன் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கவிருந்தராம்.
விக்ரமிடம் இந்த கதையை இயக்குனர் அமீர் கூறியபோது விக்ரம் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். அதன்பின் கதையில் சிறிய மாற்றத்தை கொண்டு வந்து, விக்ரம் நடிப்பதாக இருந்த கவுதம் ரோலில் சூர்யாவையும் சூர்யா முதலில் நடிப்பதாக இருந்த கண்ணன் ரோலில் நடிகர் நந்தாவையும் நடிக்கவைத்ததாக பேட்டி ஒன்றில் இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.