விக்ரமின் அடுத்தடுத்த திரைப்படங்களின் இயக்குநர்கள் குறித்த தகவல்! முதல்முறையாக கன்னட இயக்குநர்
விக்ரம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விக்ரம், இவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளன.
அதன்படி அவரின் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கோப்ரா திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே அப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட திரைப்படமாக பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அடுத்த திரைப்பட இயக்குநர்
இந்நிலையில் தற்போது விக்ரம் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாக இருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தற்போது விக்ரம் நடித்து வருகிறார்.
அதனை முடித்த பின் மீண்டும் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம். இதற்கிடையே லூசியா, யூ-டர்ன் படங்களை இயக்கிய கன்னட இயக்குநர் பவன் குமார் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு தோழிகளுடன் விஜய்யின் மகள் எடுத்துக்கொண்ட மிரர் செல்பி