மணி ரத்னத்தின் மீது அதிருப்தியில் இருக்கிறாரா விக்ரம்.. காரணம் என்ன
பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரமான ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் விக்ரம்.
கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவிற்கு விக்ரமால் வரமுடியாமல். காரணம் அவர் அப்போது உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 10ஆம் தேதி அவர் உடல்நலம் சரியாகவீடு திரும்பினார். இதன்பின், நேற்று நடைபெற்ற கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.
அதிருப்தியில் விக்ரம்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் வரும் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் படத்தில் வரும் நேரம் குறைவு என்பதன் காரணமாக மணி ரத்னத்தின் மீது அதிருப்தியில் உள்ளாராம் விக்ரம்.
இதனால், தான் அவர் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள விரும்பவில்லை என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மையமான தகவல் என்று தெரியவில்லை. இந்த செய்தியை பிரபல மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.