சிறுவயதில் இருந்தே அந்த ஒரு விஷயத்திற்காக ஜேசன் சஞ்சய் பிடிவாதமாக இருந்தார்... பிரபலம் கூறிய தகவல்
நடிகர் விஜய்
நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருப்பவர்.
கடைசியாக இவரது நடிப்பில் கோட் படம் வெளியானது, அப்படத்தை தொடர்ந்து விஜய் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படம் அடுத்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக உள்ளது, கடைசியாக விஜய்யை திரையில் பார்க்கப்போகும் சந்தோஷத்தில் ரசிகர்கள் உள்ளார்கள்.
சினிமா களத்தில் ஜெயித்த விஜய் இப்போது வேறொரு களத்தில் களமிறங்கியுள்ளார், அது எப்படி இருக்கப்போகிறது என்பதை அடுத்த வருடத்தில் காண்போம்.

ஜேசன் சஞ்சய்
விஜய் சினிமாவில் இருந்து விலகும் இந்த நேரத்தில் என்ட்ரி கொடுக்கிறார் அவரது மகன் ஜேசன் சஞ்சய். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சுதீப் கிஷன் நாயகனாக நடிக்க Sigma என்ற படத்தை இயக்கி வருகிறார் ஜேசன் சஞ்சய்.

தற்போது இயக்குனராக என்ட்ரி கொடுக்கும் ஜேசன் சஞ்சய் குறித்து விஜய்யின் உறவினரும், நடிகருமான விக்ராந்த் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அதில் அவர், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே அவரை ஹீரோவாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டினார்கள்.
ஆனால் ஜேசன் சஞ்சய் ஆரம்பத்தில் இருந்து ஹீரோ ஆவதை விட இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையில் தான் இருந்தார்.
அதேபோல் தனது சொந்த முயற்சியால் மட்டுமே வளர வேண்டும் என்றும் தந்தை பெயரை பயன்படுத்தக் கூடாது என்பதிலும் மிகவும் உறுதியாக இருந்தார் என தெரிவித்துள்ளார்.