விஜய்க்கு ஏன் குரல் கொடுக்கல? சென்சார் போர்டை தாக்கிய பேசிய நடிகர் விஷால்
சென்சார் போர்டு மீது சமீப காலமாக பல்வேறு புகார்கள் வருகிறது. குறிப்பாக விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்தது பெரிய சிக்கல் எழுந்தது. அந்த படத்தின் ரிலீஸ் இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
ஜனநாயகன் படத்திற்கு நடிகர் சங்கமோ, தயாரிப்பாளர் சங்கமோ எதுவுமே ஆதரவாக வரவில்லை என கேள்வி எழுப்பப்பட்டதற்கு நடிகர் விஷால் சென்சார் போர்டை பற்றி காட்டமாக பேசி இருக்கிறார்.

விஷால் ஆவேசம்
"எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும். கோர்ட் இருக்கும்போது நாங்கள் எப்படி தலையிட முடியும். KVN நிறுவனம் பற்றி எனக்கு தெரியாது. அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்திருந்தால் எதாவது செய்திருக்கலாம்" என விஷால் கூறினார்.
விஜய்யை உங்களுக்கு நன்றாக தெரியும், அவருக்காக பேசி இருக்கலாமே என செய்தியாளர்கள் கேட்க, "சென்சார் போர்டில் 5 பேர் அமர்ந்துகொண்டு 8 கோடி மக்கள் என்ன பார்க்க வேண்டும், என்ன பார்க்க கூடாது என முடிவு செய்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அது தான் விதியாக இருக்கிறது" என விஷால் கூறினார்.
