திருமணம் குறித்து சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை- இதோ
விஷ்ணுகாந்த்-சம்யுக்தா
பிரபலங்களுக்கு திருமணம் என்றாலே அதை ரசிகர்கள் மிகவும் ஸ்பெஷலாக பார்ப்பார்கள். அதிலும் நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் இணைந்தால் மக்களும் மிகவும் கொண்டாடுவார்கள்.
அப்படி அண்மையில் சின்னத்திரையில் ஒரு பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் இணைந்தார்கள், வேறுயாரும் இல்லை விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா தான்.
இருவரும் திடீரென காதலிக்கிறோம் என அறிவித்து திருமணமும் செய்துகொண்டார்கள்.
ஆனால் திருமணம் ஆனதில் இருந்தே அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வந்தார்கள்.
பரபரப்பு அறிக்கை
இந்த நிலையில் தான் சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் ஒரு பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், அனைவருக்கும் வணக்கம்.
ஒருவரை நம்பி எனது திருமண வாழ்க்கையை தொடங்கிய சில நாட்களுக்குள் அந்த பொய்யான மற்றும் நரக வாழ்க்கையில் இருந்து என்னை காப்பாற்றிய இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி.
அதுபோன்று எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் மற்றும் என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு தந்த மக்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. மேலும் நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை யாராவது தகர்க்க நேர்ந்தால் அதையும் வென்று காட்ட மீண்டும் தயங்க மாட்டேன் என்று அறிக்கையில் கூறியிருக்கிறார்.
விஜய் டிவியில் அடுத்தடுத்து முடியப்போகும் 4 சூப்பர் நிகழ்ச்சிகள்- ரசிகர்கள் ஷாக்