மறைந்த நடிகர் விவேக்கின் நிறைவேறாத கடைசி இரண்டு ஆசைகள், கலங்கி போன ரசிகர்கள்
தமிழ் சினிமா ரசிகர்களை பல வருட காலங்களாக சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் தான் விவேக். இவரின் காமெடிகளின் சிறப்பே யார் மனதையம் புண்படுத்தாமல் இருப்பது தான்.
கடந்த 20 வருட காலங்களாக தமிழ் சினிமாவை கலக்கி வந்த விவேக் ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் திடீரென மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று அவர் மரணமடைந்தார், இதனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே சோகத்திற்கு உள்ளாகியது.
இதனிடையே தற்போது விவேக்கின் நிறைவேறாத கடைசி இரண்டு ஆசை குறித்து தெரியவந்துள்ளது, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஆசைப்படி தமிழகம் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்ட அவர், 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். ஆனால் அவரால் 1 கோடியை எட்டமுடியவில்லை.
மேலும் திரைப்படம் ஒன்றை இயக்கவிருந்த விவேக் சத்யஜோதி தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளார். இதற்கான கதை விவாதம், நடிகர்கள், நடிகைகள், படக்குழுவினர்கள் உள்ளிட்ட விஷயங்களை தேர்வு செய்து கொண்டிருந்த நேரத்தில் தான் அவர் இறந்துள்ளார்.
இதனால் இயக்குனராக விவேக்கை பார்க்கும் வாய்ப்பை நாம் இழந்துளோம், மேலும் தற்போது நடிகர் விவேக்கின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பல ரசிகர்கள் மரகன்றினை நட்டு அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.