மறைந்த நடிகை வி.ஜே. சித்ராவிற்கு ரசிகர்களுக்கு செய்த மரியாதை.. இணையத்தில் செம வைரல்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் வி.ஜே. சித்ரா.
இவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஒரு கட்டத்தில் முல்லை என்று சொன்னாலே சித்ராவின் முகம் தான் ஞாபகம் வரும். ரசிகர்கள் கூட சித்ராவை முல்லை என்றே அழைத்து வந்தனர்.
ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை சித்ரா கடந்த ஆண்டு திடீரென மரணமடைந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது ரசிகர்கள் ஒரு புகைப்படம் ஒன்றை டிசைன் செய்துள்ளனர்.
அந்த புகைப்படத்தில் சித்ராவின் மீது ரசிகர்கள் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவருக்கு 'மக்கள் நாயகி' என்ற பட்டம் கொடுத்துள்ளனர்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
