மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை யாஷிகாவின் தற்போதைய நிலை என்ன? வெளியான ஷாக்கிங் நியூஸ்
சில நாட்களுக்கு முன் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், அவருடன் காரில் சென்றிருந்த அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த செய்து கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை யாஷிகா ஆனந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, சில ஆப்ரேஷன்களும் நடந்தது.
இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளாராம் நடிகை யாஷிகா ஆனந்த்.
மேலும் நடிகை யாஷிகா ஆனந்தின் வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
மேலும் யாஷிகாவுடன் காரில் சென்ற, இரு இளைஞர்களிடமும் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருதாகவும் தெரிவித்துள்ளனர்.