துப்பாக்கி படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க வேண்டியது இவர் தானாம்.. விஜய் கிடையாதாம்.. முதன் முறையாக போட்டுடைத்த ஏ.ஆர். முருகதாஸ்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி.
இப்படத்தின் மூலம் தளபதி விஜய்யின் திரையுலக நட்சத்திர அந்தஸ்து பல மடங்கு உயர்ந்தது என்று தான் சொல்லவேண்டும்.
இந்நிலையில் துப்பாக்கி படத்தின் கதையை முதன் முதலில் மகேஷ் பாபுவை வைத்து தான் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தாராம் ஏ.ஆர். முருகதாஸ்.
ஆனால் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி என்னிடம் வந்து விஜய்யின் கால்சீட் ப்ரீயாக இருக்கிறது என்று கூறியதால், இப்படத்தை விஜய்யை வைத்து எடுத்தேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அளித்திருந்த பேட்டி ஒன்றில் " இப்படத்தை நான் முதன் முதலில் ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து தான் எடுக்க இருந்தேன் " என்று கூறியிருந்தார்.
இப்படி மாற்றி மாற்றி இவர் கூறியிருப்பதால், இதில் எது உண்மை என்று தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியிலும் குழப்பம் எழுந்துள்ளது.

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri
