ரூ 1 லட்சம் பரிசு! கேடயம்! எஸ்.பி.பி பெற்ற முக்கிய விருது! இந்த வருஷம் யாருக்கு தெரியுமா?
பாடகர் எஸ்.பி.யின் குரல் இன்னும் அவரின் பாடல்களின் மூலம் நம் மனதோடு பேசிக்கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சிகள், வானொலிகள் என ஆகியவற்றிலும் எஸ்.பி.பியின் பாடல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.
அவரின் மரணம் யாராலும் ஏற்கப்படாததாகவே உள்ளது. பல மொழிகளில் பாடியுள்ள அவர் எத்தனையோ விருதுகளையும் பெற்றுள்ளார். கேரளாவின் சபரிமலை அய்யப்பன் தேவஸ்தானத்தினரால் வழங்கப்படும் அரிவராசனம் விருதையும் அவர் பெற்றுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த விருது ரூ 1 லட்சம் பணமுடிப்பையும், கேடயத்தையும் உள்ளடக்கியது. இந்த வருடத்திற்கான அரிவராசனம் விருதை புகழ்பெற்ற ஆன்மீக பாடகர் வீரமணிக்கு வழங்கப்படுகிறதாம். மகர விளக்கு நாளான ஜனவரி 14 ம் தேதி ம் அய்யப்பன் கோவிலில் அவருக்கு வழங்கப்படவுள்ளதாம். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பக்தி பாடல்களை வீரமணி பாடியுள்ளார்.
இன்றும் அய்யப்பன் கோவிலில் ஒலிக்கும் அரிவராசனம் பாடலை பாடிய ஜேசுதாஸ் இந்த விருதையும் பெற்றுள்ளார் என்பது கூடுதல் தகவல்.