நிச்சயதார்த்தம் முடிந்தும் பாதியிலேயே த்ரிஷா திருமணம் நிற்க காரணம்?... பிரபலம் ஓபன் டாக்
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை த்ரிஷா.
கடந்த 2025ம் ஆண்டு த்ரிஷா நடிப்பில் தக் லைஃப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்கள் வெளியாகி இருந்தன. இந்த ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியை கண்டது, ரூ. 300 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டை செய்தது. இப்படத்தை தொடர்ந்து நடிகை த்ரிஷா நடிப்பில் அடுத்து சதுரங்க வேட்டை 2, கர்ஜணை ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.
தமிழை தாண்டி மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ராம் என்ற படம் தயாரானது, ஆனால் படம் வெளியாகாமல் உள்ளது.

திருமணம்
சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகை த்ரிஷா இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. கடந்த 2014ம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் வருண் மணியனுடன் த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
2015, ஜனவரி மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென திருமணம் நின்றது.

இதுகுறித்து த்ரிஷா சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில், திருமணம் செய்யவிருந்த நபர், சினிமாவில் இருந்து விலகுமாறு தன்னிடம் கூறியதாகவும், அதனை ஏற்க முடியாத காரணத்தால் திருமணத்தை நிறுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.