ஊரே சிரிக்குது.. யாஷிகா பொது இடத்தில் செய்த விஷயத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
யாஷிகா ஆனந்த்
நடிகை யாஷிகா ஆனந்த் இணையத்தில் பாப்புலராக இருப்பதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயங்குவது இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். எல்லைமீறி கவர்ச்சி காட்டி அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் போட்டோ வீடியோக்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்கிறார்கள்.
அவர்களை கவர்வதற்காகவே தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

லண்டனில் இப்படியா.. ட்ரோல் செய்யப்படும் வீடியோ
இந்நிலையில் யாஷிகா சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ட்ரோல்களை சந்தித்து வருகிறது. யாஷிகா ஆனந்த் அரைகுறை உடையில் லண்டனில் பொது இடத்தில் உலா வந்திருக்கிறார்.
அங்கு மக்கள் எல்லோரும் குளிரில் நடுங்கி அதற்கேற்ற உடை அணிந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். இவர் மட்டும் இப்படி கிளாமராக உடை அணிந்து சுற்றுவதை பார்த்து சிலர் சிரித்துவிட்டும் போகிறார்கள்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் யாஷிகாவை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
Also Read: தயாரிப்பாளராகும் லோகேஷ் கனகராஜ்.. 2 டாப் ஹீரோக்கள் உடன் கூட்டணி