இந்த இடத்துக்கு வர மிகவும் உழைத்து இருக்கேன்- விபத்துக்கு பிறகு யாஷிகா போட்ட முக்கிய பதிவு
பிக்பாஸ் 2வது சீசன் மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சயமானவரானார் நடிகை யாஷிகா. அதன்பிறகு சில நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்த அவர் படங்களில் அதிகம் கமிட்டாகி வந்தார்.
கடந்த வாரத்துக்கு முன் கோர விபத்தில் அவர் சிக்கியிருந்தார். அதனால் அவரது உடம்பில் கால், முதுகு என பல இடங்களில் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் வீட்டில் படுத்த படுக்கையில் தான் உள்ளார்.
அவருடன் பயணித்த அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அது யாஷிகாவிற்கு கடும் துக்கத்தை கொடுத்துள்ளது.
தற்போது யாஷிகா நடித்துள்ள கடமையை செய் படத்தின் ஃபஸ்ட் லுக் விரைவில் வெளியாக இருக்கிறதாம். அதனை பதிவிட்ட யாஷிகா, இந்த நிலையை அடைய நான் அதிகம் கஷ்டப்பட்டுள்ளேன் என பதிவு செய்துள்ளார்.
One side life is very numb and hurting . And the other side life must go on ..
— Yashika Anand (@iamyashikaanand) September 8, 2021
.
It took many years of hardwork to reach till here ?? #KadamaiyaiSei #staytuned thankyou @iam_SJSuryah for being a pillar ❤️ pic.twitter.com/tZXvPYfsgR