சரிகமப போட்டியாளருக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த எஸ்.பி. சரண்... என்ன பாருங்க
சரிகமப
சரிகமப, ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று.
முதல் சீசனிற்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்து ஒளிபரப்பாகி இப்போது சீனியர்களுக்கான 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட இந்த சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
அந்த பிரம்மாண்ட மேடையில் பாடப்போகும் போட்டியாளர்களும் தேர்வாகிவிட்டனர். சுஷாந்திகா, சபேசன், செந்தமிழின், பவித்ரா, ஸ்ரீஹரி, ஷிவானி ஆகியோர் அந்த பிரம்மாண்ட மேடையில் பாட தேர்வாகியுள்ளனர்.

பரிசு
தற்போது சரிகமப சீசன் சிறியவர்களுக்கான நிகழ்ச்சியில் பாடிய யோகேஸ்வரன் தனக்கு பிரபலத்திடம் இருந்து கிடைத்த பரிசு குறித்து பதிவு செய்துள்ளார்.

அதாவது பாடகர் எஸ்.பி.சரண் அவர்கள் யோகேஸ்வரனுக்கு எஸ்.பி.பி முகம் பதிந்த ஒரு மோதிரத்தை பரிசாக கொடுத்துள்ளாராம். இதோ அந்த புகைப்படம்,