ஸ்ரீதேவி மரணம் பற்றிய உண்மையை மறைச்சிட்டாங்க.. போலி ஆவணம் வெளியிட்ட யூடியுபர் மீது நடவடிக்கை
நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018 பிப்ரவரி 24ம் தேதி துபாயில் அவரது ஹோட்டல் அறையில் பாத்டப்பில் மூழ்கி உயிரிழந்தார். அவர் மரணம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் விசாரணையில் அவர் இறந்தது விபத்து தான் என தெரிவித்தனர்.
இந்நிலையில் புவனேஸ்வரை சேர்ந்த தீப்தி என்ற யூடியூபர் ஸ்ரீதேவி மரணம் பற்றிய உண்மைகளை இந்திய அரசும் துபாய் அரசும் மூடி மறைப்பதாக தெரிவித்தார். அதற்கு ஆதாரமாக அவர் பிரதமர் அலுவலகம் மற்றும் பாதுகாப்பு துறை அலுவலகம் ஆகியவற்றில் இருந்து வந்த கடிதங்களை காட்டி இருந்தார்.
சிபிஐ குற்றப்பத்திரிகை
அரசு கேட்டுக்கொண்டதால் இது பற்றி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதில் யூடியூபர் தீப்தி காட்டிய ஆவணங்கள் போலி என தெரிய வந்திருக்கிறது.
இது பற்றி தீப்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் தீப்தி விரைவில் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.