ஜீ தமிழில் முடிவுக்கு வந்த வீரா சீரியல்... கடைசிநாள் படப்பிடிப்பு புகைப்படங்கள் இதோ
வீரா சீரியல்
ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று வீரா.
கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வைஷ்ணவி மற்றும் அருண் என்ற புதிய ஜோடி இணைய சீரியல் துவங்கப்பட்டது. ஒரு விபத்தால் தங்களது சகோதரரை இழக்கிறார்கள் வீரா மற்றும் கண்மணி சகோதரிகள்.
சகோதரரின் இறப்பிற்கு காரணமானவரையே சூழ்நிலையால் திருமணம் செய்கிறார் வீரா. அதன்பின் சகோதரிகள் அவரை மன்னித்தார்களா இல்லையா என்பதை நோக்கிய கதையாக வீரா சீரியல் இருந்தது.
இந்த தொடர் முதல் பாகம் முடிவடைந்து இரண்டாவது பாகமாக ஒளிபரப்பாகி வந்தது.

போட்டோஸ்
2 வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த வீரா சீரியல் விரைவில் கிளைமேக்ஸ் எட்ட இருப்பதாக ஏற்கெனவே தகவல் வந்தது.
தற்போது வீரா சீரியலின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாம், சீரியலின் கிளைமேக்ஸ் நாளை ஞாயிறு (செப் 20) மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். இதோ கடைசி நாள் சீரியல் குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்,