இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை கடத்தி சென்ற ரவுடிகள்.. முதல்வரிடம் கூறி காப்பாற்றிய பிரபல நடிகை
ஏ.ஆர். முருகதாஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்கத்தில் கடைசியாக தர்பார் திரைப்படம் வெளிவந்தது. இதன்பின் இதுவரை முருகதாஸ் இயக்கத்தில் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை.
ஆனால், விரைவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து புதிய படத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் கஜினி. இப்படம் ஆரம்பகட்டத்தில் குறைவான பட்ஜெட்டில் தான் துவங்கியுள்ளது.
கஜினி விவகாரம்
ஆனால், படம் முடியும் பொழுது ரூ. 13 கோடி வரை தயாரிப்பாளருக்கு செலவு ஆகியுள்ளது. அன்று இருந்த சூழ்நிலையில் சூர்யாவிற்கு அவ்வளவு பெரிய மார்க்கெட் சினிமாவில் இல்லை. இதனால் தயாரிப்பாளருக்கு அதிக நஷ்டம் ஏற்படும் என தெரியவந்துள்ளது. மேலும் இப்படத்தில் நடித்ததற்காக சூர்யாவிற்கும் ரூ. 20 லட்சம் சம்பளம் பாக்கி தயாரிப்பாளர் தரவில்லையாம்.
அந்த பணத்தை தந்தாள் தான் படத்தை ரிலீஸ் பண்ணனும் என சூர்யாவின் மேனேஜர் கூறியதால், படத்தின் ஹிந்தி உரிமையை மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்து சூர்யாவின் பாக்கி பணத்தை செட்டில் செய்கிறார். இதன்பின் கஜினி திரைப்படம் தமிழில் வெளியாகி மாபெரும் அளவில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகிறது.
படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியில் இப்படத்தை ரீமேக் செய்யலாம் என முடிவு செய்கிறார்கள். இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தான் இயக்குகிறார். இந்த நிலையில், தயாரிப்பாளர் சந்திரசேகர் கடும் கோபமடைகிறார். இந்தி உரிமையை குறைவான விலைக்கு இவர் விற்றுவிட்டார். ஆனால், தற்போது இந்தியில் இப்படம் ரீமேக் ஆகிறது, ஏ.ஆர். முருகதாஸ் தான் இப்படத்தையும் இயக்குகிறார்.
கடத்தி சென்ற ரவுடிகள்
இந்தியில் ரீமேக்காகும் இப்படத்தின் பட்ஜெட்டும் பெரிது என்பதினால் தயாரிப்பாளர் சந்திரசேகர், ஏ.ஆர். முருகதாஸ் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி சேலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். முருகதாஸ் தனது நண்பர்களுடன் இணைந்து படத்தின் இந்தி உரிமையை என்னை கேட்காமல் விற்றுவிட்டார் என்றும், அந்த உரிமை தற்போது கூட என்னிடம் தான் இருக்கிறது என்றும் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மரணத்திற்கு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் செல்கிறார். அப்போது அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் ஏ.ஆர். முருகதாஸை கடத்தி கொண்டு காரில் சென்றுவிட்டார்களாம். இதை பார்த்த நபர்கள் உடனடியாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு செல்கிறார்கள். அங்கு நடிகை ராதிகா இருக்கிறார்.
காப்பாற்றிய நடிகை
அவரிடம் ஏ.ஆர். முருகதாஸை சில ரவுடிகள் கடத்தி சென்றுவிட்டதாக கூறி, உடனடியாக அவரை காப்பாற்றும்படி ராதிகாவிடம் கேட்கிறார்கள். நடிகை ராதிகாவும் அதற்க்கான முயற்சியில் இறங்கி, அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு உடனடியாக போன் கால் செய்து ஏ.ஆர். முருகதாஸை கடத்தி சென்றுவிட்டார்கள் என்றும், காப்பாற்றி தரும்படியும் கோரிக்கை வைத்துள்ளார்.
அதன்படி, நடவடிக்கை எடுத்த கருணாநிதி ஏ.ஆர். முருகதாஸை காப்பாற்றுகிறார். அப்போது தான் தெரியவருகிறது. ஏ.ஆர். முருகதாஸை கடத்தி சென்றது ரவுடிகள் இல்லை, சேலம் காவல் துறையினர்கள் என்று. இதன்பின் இந்த பிரச்சனையை தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி முடித்துள்ளார்களாம்.
வெளிநாட்டில் இந்தியன் 2 ஷூட்டிங்.. ஷங்கர் சொன்ன முக்கிய அப்டேட்