பரியேறும் பெருமாள் படத்தில் நடந்தது மாரி செல்வராஜ் வாழ்வில் நடந்ததா?? - அதிர்ச்சி தகவல்

By Yathrika Jun 29, 2023 08:00 AM GMT
Report

மாரி செல்வராஜ்

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ்.

இவர் இயக்கத்தில் வெளியான "பரியேறும் பெருமாள்" மற்றும் "கர்ணன்" படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மாரி செல்வராஜ் தனது மூன்றாவது படமாக மாமன்னன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இவரின் பட கதைகள் மக்கள் மத்தியில் இருக்கும் சாதி வேற்றுமை தழுவி தான் இருக்கிறது.

இந்நிலையில் "பரியேறும் பெருமாள்" படத்தில் நடித்த மாரிமுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் பற்றி அதிர்ச்சி அளிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார்.


மாரிமுத்து பேட்டி

அதில், "பரியேறும் பெருமாள்" படத்தில், கதாநாயகன் கதிரை கதாநாயகியின் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து அடித்து கதிர் மீது சிறுநீர் கழிப்பது போல் காட்சி இருக்கும்.

அதன் படப்பிடிப்பு தூத்துக்குடிக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் உள்ள கருங்குளம் என்ற ஊரில் தான் எடுக்கப்பட்டது.  அந்த காட்சியை எடுக்கும்போது இயக்குனர் ஒரு மிருகம் போல இருந்தார்.

இயக்குநர் இருந்த கோபத்தை பார்த்து, ஏன் சார் இவ்ளோ கோவம் என கேட்டபோது அவர் கூறியது எனக்கு அதிர்ச்சி அளித்தது.

அவர், இது என் வாழ்வில் நிஜமாகவே நடந்த சம்பவம் என கூறினார்.  அப்போது தான் எனக்கு புரிந்தது மாறி செல்வராஜ் தனது காதலியின் வீட்டுக்கு சென்றபோது இப்படி அவமானப்பட்டு இருக்கிறார் என்று புரிந்துகொண்டேன்.

அதன் பின் இந்த காட்சியை நான் சிறப்பாக நடித்து முடித்தேன் என தெரிவித்தார்.  

பரியேறும் பெருமாள் படத்தில் நடந்தது மாரி செல்வராஜ் வாழ்வில் நடந்ததா?? - அதிர்ச்சி தகவல் | Actor Marimuthu Talks About Mari Selvaraj And Film

தனது இரண்டாவது காதலருடன் நடுரோட்டில் Lip Lock Kiss அடித்த நடிகை எமி ஜாக்சன்- வைரலாகும் புகைப்படங்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US