தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல வில்லன் நடிகர்!
சினிமாத்துறையில் நடிகர்கள் தற்கொலை தொடர்கதையாகிவிட்டது. இது சினிமா ரசிகர்களுக்கு தொடர்ந்து சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது பிரபல மலையாள வில்லன் நடிகர் என்.டி.பிரசாத் தற்கொலை செய்துகொண்டிருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
நிவின் பாலியின் ஆக்ஷன் ஹீரோ பிஜு படத்தில் நடித்து பிரபலமான அவர் அதற்கு பிறகு பல படங்களில் நடித்தார்.
43 வயதாகும் அவர் நேற்று முன்தினம் இரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவர் வீட்டருகில் இருக்கும் மரத்தில் உடலை அவரது குழந்தைகள் பார்த்திருக்கின்றனர்.

போலீசார் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அதன் பின் உடலை ஒப்படைத்து இருக்கின்றனர். தற்கொலைக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
மலையாள சினிமா துறை பிரபலங்கள் பலரும் பிரசாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan