பொது இடத்திற்கு சென்று மடிப்பிச்சை கேட்ட நடிகர் பார்த்திபன்- யாருக்காக தெரியுமா?
நடிகர் பார்த்திபன்
தமிழ் சினிமாவில் படங்கள் எடுக்க வேண்டும் என்று இல்லாமல் வித்தியாசமாக இதுவரை யாரும் முயற்சி செய்யாத விஷயங்களை செய்ய வேண்டும் என்று ஒரே குறிக்கோளோடு படங்கள் எடுப்பவர் பார்த்திபன்.
கடைசியாக அவர் இயக்கிய ஒத்த செருப்பு படத்திற்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைத்தது, இப்போது அடுத்த படத்தின் வேலைகளில் பார்த்திபன் படு பிஸியாக இருக்கிறார்.
ஆனால் இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை.

மடிப்பிச்சை கேட்ட பிரபலம்
சென்னையில் 46வது சர்வதேச புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ம் தேதி தொடங்கியது.
இந்த புத்தக கண்காட்சிக்கு வந்த நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சிறைவாசிகளுக்காக புத்தகம் வேண்டி ஒவ்வொரு அரங்காக சென்று மடிபிச்சை கேட்டு புத்தகம் பெற்றுள்ளார். அவரின் இந்த செயல் மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது எப்படி, நடிகை ஆல்யா மானசாவே வெளியிட்ட வீடியோ- வருந்தும் ரசிகர்கள்