சினிமா குறித்து ஷாக்கிங் முடிவு எடுத்தாரா நடிகை அமலாபால்- ரசிகர்கள் சோகம்
நடிகை அமலாபால்
சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அமலாபாலுக்கு பெரிய ஹிட் கொடுத்த படம் என்றால் அது மைனா தான்.
விஜய்யுடன் தலைவா, விக்ரமுடன் தெய்வத் திருமகள், ஆர்யாவுடன் வேட்டை, ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, சூர்யாவுடன் பசங்க 2 என முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார்.
இப்படி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்தார், ஆனால் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

ஷாக்கிங் முடிவு
நடிகை அமலாபால் கடந்த சில மாதங்களாகவே ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுவந்த அமலாபால் இப்போது இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள ஆசிரமத்துக்கு சென்று தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படி தொடர்ந்து அமலாபால் ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதால் சினிமாவிற்கு முழுக்க போட முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து அமலாபால் தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை.
சினேகாவிற்கு இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கிய பிரசன்னா- ஏன் தெரியுமா?