தயாரிப்பாளருடன் 5வது திருமணம்.. நடிகை அஞ்சலி கூறிய தகவல்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. சமீபத்தில் இவருக்கு பிரபல தயாரிப்பாளருடன் திருமணம் என தகவல் ஒன்று இணையத்தில் பரவியது. ஆனால், இதுகுறித்து நடிகை அஞ்சலி எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
தயாரிப்பாளருடன் திருமணமா?
இந்த நிலையில், அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை அஞ்சலியிடம், திருமணம் குறித்து உலா வரும் செய்திகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய நடிகை அஞ்சலி, எனக்கு திருமணம் என வெளியாகும் செய்திகளுக்கும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை, இதுவரை எனக்கு நான்கு முறை இதுபோல் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். இது எனக்கு 5வது திருமணம் என்று பேசி வதந்திகளுக்கு பதிலடி கொடுத்தார்.

மேலும் நான் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன் என்றும், ஆனால், தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறினார் நடிகை அஞ்சலி. தான் EMI செலுத்தி வருவதாகவும் அதனால் தான் தற்போது திருமணம் செய்து கொள்ள போதில்லை என்றும் முடிவு எடுத்துள்ளாராம்.
தெலுங்கில் பிஸி
தமிழில் அங்காடி தெரு, மங்காத்தா, கலகலப்பு என பட்டையை கிளப்பி வந்த அஞ்சலிக்கு தற்போது தமிழ் படங்கள் வாய்ப்பு பெரிதும் இல்லை. ஆனால், தெலுங்கில் தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan