காதலுக்காக அடிவாங்கிய ராமராஜன்.. எங்க பிரிவுக்கு இது தான் காரணம்: நடிகை நளினி
80 -களில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை நளினி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'ராணுவ வீரன்' படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார் நடிகை நளினி.
ஒருதலைக் காதல்
ராமராஜன் உதவி இயக்குனராக இருக்கும் போதே நடிகை நளினி மீது ஒருதலைக் காதல் இருந்ததாம். இந்த விஷயம் நளினி குடும்பத்திற்கு தெரியவந்ததால் ராமராஜனை பிடித்து அடித்துவிட்டனர். இதனால் நளினி தமிழ் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். பின்னர் ஒரு வருடம் கழித்து சென்னைக்கு வந்த அவர், ராமராஜனை திருமணம் செய்து கொண்டார்.
நன்றாக போய் கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடு காரணத்தால் 2000 -ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இது தான் காரணம்
இந்நிலையில் பேட்டி அளித்த நளினி தனது திருமண வாழ்க்கை பற்றி பேசியிருந்தார். அதில் அவர், " நான் திருமணம் ஆகி சில வருடங்களுக்கு பிறகு என்னுடைய தாய் ஜோசியம் பார்க்க அழைத்து சென்றார்கள். அப்போது ஜோசியத்தில் நான் திருமணம் ஆகி சில ஆண்டுகளில் பிரிந்துவிடுவோம் என சொன்னார்கள்.
இதைப்போல பலரும் பேசினார்கள். அதனால் சண்டை போட்டு பிரிய வேண்டாம் என்பதற்காக நாங்களே சந்தோசமாக பிரிந்துவிட்டோம்" என கூறியிருந்தார்.
பிக்பாஸ் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு அதிர்ச்சி செய்தி- என்ன இப்படி சொல்றாங்க

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
