இனி தமிழ் சினிமா போதும், அதிரடி முடிவு எடுத்த நடிகை பிரியா பவானி ஷங்கர்- என்ன விஷயம்?
ப்ரியா பவானி ஷங்கர்
தமிழ் சினிமாவில் வலம் வரும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் ப்ரியா பவானி ஷங்கர்.
சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்த இவர் அடுத்தே சினிமாவில் என்ட்ரீ கொடுத்தார்.
முதல் படம் ஹிட் அடிக்க தொடர்ந்து ப்ரியா பவானி ஷங்கர் 20 படங்களுக்கு மேல் தமிழில் படங்கள் நடித்துவிட்டார். கடைசியாக இவரது நடிப்பில் பொம்மை என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
புதிய படம்
தற்போது ப்ரியா பீமா என்ற தெலுங்கு படத்தில் கோபிசந்த் ஜோடியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
கோபிசந்தின் 34வது படமான இதை கன்னட இயக்குனர் ஹர்ஷா இயக்குகிறார், இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
பிரியா பவானி சங்கர், ஏற்கனவே கல்யாணம் கமனீயம் என்ற படத்தில் நடித்திருந்தார், இது அவருக்கு 2வது தெலுங்கு படம்.
தமிழகத்தில் 2வது நாளில் ரஜினியின் ஜெயிலர் படம் செய்த தெறி வசூல்- வேட்டை ஆரம்பம்