ஐஸ்வர்யா ராய் பெயரில் பெரிய மோசடி! போலீசாரிடம் சிக்கிய கும்பல்
நொய்டாவில் வெளிநாட்டை சேர்ந்த மூன்று நபர்கள் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து தற்போது போலீஸிடம் சிக்கியுள்ளனர்.
பணமோசடி
இந்த மூன்று நபர்களும், முன்னாள் ராணுவ வீரரிடம் கேன்சர் குணப்படுத்தும் மூலிகை என கூறி அவரிடம் இருந்து 1.80 கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளனர். மூவரில் இரண்டு பேர் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் மற்றொருவர் கானா நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

விசாரணை
மேலும் இவர்கள் போலி ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அது இந்தியா மதிப்பில் ரூபாய் 10.76 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
தற்போது குற்றவாளியிடம் இருந்து லேப்டாப் மற்றும் சிம் கார்டு, மொபைல் போன் பறிமுதல் செய்துள்ளனர். இந்த மூன்று குற்றவாளிகளும் சைபர் க்ரைம் நல்ல அனுபவம் உள்ளவர்கள், அதனால் இவர்களிடம் இருந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஐஷ்வர்யா ராய் போலி பாஸ்போர்ட்டை எதற்காக தயாரித்தார்கள் என்பது தான் தற்போது பெரிய கேள்வியாக எழுந்திருக்கிறது.

அவதார் 2 படம் பார்த்த நபர் தியேட்டரில் மரணம்! அதிர்ச்சி சம்பவம்