திருத்தணி கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. எதற்காக சென்றுள்ளார் தெரியுமா?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தவர். பின் நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்ட சினிமாவில் இயக்குநராக களமிறங்கினார்.
தனது முன்னாள் கணவரை வைத்து 3 படத்தை இயக்கி மாஸ் ஹிட் கண்டார். அதன்பின் வை ராஜா வை படத்தை இயக்கினார், ஆனால் படம் சரியாக ஓடவில்லை.
கடைசியாக விஷ்ணு விஷால், விக்ராந்த் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்க லால் சலாம் என்ற படத்தை இயக்கினார், ஆனால் இந்த படமும் சுமாராக தான் ஓடியது.
எதற்காக தெரியுமா?
இந்நிலையில், நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு தான் இயக்க உள்ள புதிய படத்தின் கதையை முருகன் திருவடியில் வைத்து சாமி தரிசனம் செய்துள்ளார். தற்போது இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.