அஜித்தின் அடுத்த பட இயக்குநர் யார் தெரியுமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
அஜித்
நடிகர் அஜித் சமீபத்தில் தான் குட் பேட் அக்லி எனும் மாபெரும் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.
கடந்த மாதம் திரையரங்கில் வெளிவந்த இப்படம் உலகளவில் வசூல் வேட்டையாடி சாதனை படைத்துள்ளது. குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

யாருடைய இயக்கத்தில் அடுத்ததாக அஜித் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். தனுஷ் கதை கூறியுள்ளதாக தகவல் வெளிவந்தது. அதே போல் ஆதிக் ரவிச்சந்திரனும் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார் என்றனர்.
அடுத்த பட இயகுநர்
இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் என தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய இது உறுதியான தகவல் என்று கூறுகின்றனர். குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இருவரும் இணைகிறார்கள்.

மேலும் இப்படத்தையும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தான் தயாரிக்கிறார்களாம். இந்த தகவலை பிரபல மூத்த சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri