காலில் இவ்வளவு பெரிய தழும்பா!! சீரியல் நடிகை ஆல்யா மானசாவிற்கு என்ன ஆச்சு
ஆல்யா மானசா
சின்னத்திரையில் முன்னணி நடிகையாக மாறுவது என்பது எளிதான விஷயம் அல்ல. அந்த இடத்தை தனது முதல் சீரியலில் பிடித்தவர் ஆல்யா மானசா.

ராஜா ராணி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்த ஆல்யா மானசா திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பின்பும் கூட தற்போது இனியா எனும் சீரியலில் பிசியாக நடித்து வருகிறார்.
டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்து எப்படி இறந்தார்.. இறுதி நிமிடம் குறித்து பேசிய எதிர்நீச்சல் நடிகர், மனமுடைந்த இயக்குனர்
காலில் பெரிய தழும்பு
இந்நிலையில், நடிகை ஆல்யா மானசாவின் காலில் இருக்கும் பெரிய தழும்புபை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். இந்த தழும்பு எப்படி ஏற்பட்டது என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நடிகை ஆல்யா மானசா சீரியல் நடிகைகளுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியில் கலந்து கொண்டபோது இடது கால் எலும்பு முறிந்துள்ளது.

அதை குணப்படுத்த அவருடைய இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாம். இது நடந்து சில மாதங்கள் ஆகிய நிலையில், ஆல்யா அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தில் இடது காலில் இருக்கும் அந்த பெரிய தழும்பை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி அவரை நலம் விசாரித்துள்ளனர்.
ஆனால், தற்போது நடிகை ஆல்யா மானசா நலமாக தான் இருக்கிறார் என்று தெரியவந்தவுடன் தான் நிம்மதியடைந்துள்ளனர்.