இலங்கைக்கு சென்றுள்ள சீரியல் பிரபலங்கள் ஆல்யா மானசா, சஞ்சீவ்- எங்கே சென்றுள்ளார்கள் தெரியுமா?
ஆல்யா மானசா-சஞ்சீவ்
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான ஒரு தொடர் ராஜா ராணி. பிரவீன் பென்னட் இயக்க சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இந்த தொடர் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த தொடரின் மூலம் இவர்களுக்குள் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தற்போது சஞ்சீவ் கயல் என்ற தொடரில் நடித்து வர இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு ஆல்யா மானசா எந்த தொடரிலும் இன்னும் நடிக்க தொடங்கவில்லை.
ஆனால் புதிய தொடரில் இப்போதைக்கு கமிட்டாகியுள்ளார்.
இலங்கையில் பிரபலங்கள்
நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் பங்குபெறும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா அண்மையில் இலங்கை சென்றுள்ளனர். சென்னை கிளம்பியதில் இருந்து இலங்கை சென்றது வரை வீடியோவாக எடுத்து அதை தங்களது யூடியூப் பக்கத்திலும் பதிவு செய்துள்ளனர்.
இதோ அவர்கள் வெளியிட்ட வீடியோ,
இந்த வாரம் பிக்பாஸ் 6வது வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்?- ஓட்டிங் விவரம், குறைவான வாக்கு யாருக்கு?